×

ஜெயலலிதா பற்றி பேச பன்னீருக்கு தகுதி இல்லை; கோடநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் போராட்டம் நடத்துகிறார்: ஜெயக்குமார் காட்டம்

சென்னை: கோடநாடு பங்களாவை அபகரிக்கவே டி.டி.வி.தினகரன் போராட்டம் நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா பற்றி பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை என்று காட்டமாக கூறினார். ஜெயலலிதாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதாகவுக்கு எதிராக ஜானகி அணி சார்பில் வேட்பாளரின் முகவராக செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். கோடநாடு பங்களா யாருக்கு சொந்தம் என்பது ஓ.பி.எஸ்.க்கு நன்றாக தெரியும் என்று குறிப்பிட்டார்.

The post ஜெயலலிதா பற்றி பேச பன்னீருக்கு தகுதி இல்லை; கோடநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் போராட்டம் நடத்துகிறார்: ஜெயக்குமார் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Panneer ,Jayalalitha ,DTV ,Dhinakaran ,Kodanadu ,Jayakumar Kattam ,Chennai ,Former Minister ,Jayakumar ,DTV Dinakaran ,Jayalalithaa ,Dinakaran ,Kodanadu bungalow ,
× RELATED மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு...